சாராயம் விற்ற 4 பேர் கைது

ஆத்தூர், ஜூன் 21:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வடகுமரை மேட்டுத்தெரு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, சாராயம் விற்பனை செய்த கலியமூர்த்தி மனைவி சிவகாமி(60), கிராங்காடு சின்னபையன் மகன் பால்ராஜ் (25), சிறுவாச்சூர் வடக்கு தெரு ராமசாமி(58), தலைவாசல் காமக்காபாளையம் பெரியம்மாள்(60) ஆகிய 4பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை