சான்றிதழ்கள் சிறப்பு முகாம்

பூந்தமல்லி: பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டா மற்றும் ஓய்வூதியம் பெற சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விதமான சான்றிதழ்களை பெறுவதற்காக 6 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி அளவில் இந்த சிறப்பு முகாம் தொடங்கி நடைபெறும். எனவே, பூந்தமல்லி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் வருவாய் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை