சாதி பற்றி விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் நடிகை மீரா மிதுன்

சென்னை:தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து நடிைக மீரா மிதுன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் பேசியிருப்பதாவது: பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், பொதுமக்களும், மீரா மிதுனை உடனே கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி