சாதனை மாணவர்களுக்கு பள்ளி ஆண்டு விழாவில் பாராட்டு

 

பந்தலூர்: பந்தலூர் டியூஸ் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் செயல்பட்டு வரும் டியூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் உஜ்வல்தீப் காடேராவ் சாகிப் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுசீந்திரநாத் வரவேற்று பேசினார்.

வந்தனா காடே குத்துவிளக்கு ஏற்றி வைத்தார், மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் (ஜென்மம் லேன்ட் கூடலூர் ) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா, பந்தலூர் தாசில்தார் நடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு திறன் போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆலோசகர்கள் ராஜசேகர், வழக்கறிஞர் பரணிகுமார், சிவசக்திவேல், வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். மேலும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எபினேசர் நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை