சாட்சி சொல்ல வந்தவரை மிரட்டியவர் மீது வழக்கு

 

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாசலம் (52). இவர் ஒரு வழக்கு தொடர்பாக கோவை ஜேஎம் எண் 6 கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்துள்ளார். அப்போது கோர்ட் வளாகத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூர் வளையன் குட்டை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் குப்புசாமி என்பவர் அங்கே இருந்தார். இவர் மருதாச்சலத்திடம், தகாத முறையில் பேசி மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது