சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஜூலை 7: பெங்களூரு  நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர்(45). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கிருஷ்ணகிரியில் உள்ள பல்பொருள் அங்காடி முன் சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

12 மணி நேரம் போக்குவரத்து தடை ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம் பிணையம் வழங்க போலி ஆவணங்கள் தாக்கல்

கனரக லாரி மோதியதால் விரிசல் ஏற்பட்ட சமயபுரம் நுளைவு வாயில் இடித்து அகற்றம்

குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் அதிகாரி ஆய்வு