சென்னை: எஃப்.ஐ.ஆர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், மோகன்தாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். நான் சமூக வலைத்தளங்களில் இருந்து கொஞ்சம் காலத்துக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்’ என கூறியுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவைப்பார்த்த ரசிகர்கள், ஏன் இந்த திடீர் முடிவு, விஷ்ணு விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வருகின்றனர். மனைவி ரஜினியை பிரிந்த பிறகு ஜுவாலா கட்டாவை விஷ்ணு விஷால் திருமணம் செய்தார். அவ்வப்போது இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்கள். ஆனால் கடந்த சில மாதமாக அதுபோன்ற புகைப்படத்தை இவர்கள் வெளியிடவில்லை என்றும் நெட்டிசன்கள் சிலர் சுட்டிக் காட்டி வருகின்றனர்….
சமூக வலைத்தளத்திலிருந்து விஷ்ணு விஷால் விலகல்
previous post