சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 29ம் தேதி நிலவரப்படி 5.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் 4வது இடத்தில் இருப்பதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்த புள்ளி விவரம் கவலையளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் அறிகிறேன். நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….