சபாநாயகம் 100-வது பிறந்த நாள் விழா இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பல்கலைக்கழகமாக இருக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு, சபாநாயகம் ஒரு பல்கலைக்கழகமாக  விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் 100வது பிறந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  பேசியதாவது:  தலைவர் கலைஞருடைய முக்கியமான ஆட்சிக்காலம் 1971-76.  அப்போது தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் சபாநாயகம். 1976-ம் ஆண்டு கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சிக் கலைக்கப்பட்டபொழுது சில அதிகாரிகளை திமுக அதிகாரி என்று சொல்லி மாற்ற வேண்டுமென்று சொன்னார்கள். யாரிடத்தில் என்றால், இங்கு இருக்கக்கூடிய நம்முடைய சபாநாயகம் தலைமைச் செயலாளராக இருந்தபோது சொன்னார்கள். அப்போது என்ன பதில் சொன்னார் என்றால், அனைத்து அதிகாரிகளும், அரசின் அதிகாரிகளே தவிர அரசியல் அதிகாரிகள் அல்ல என்று துணிச்சலாக பதில் சொன்னவர் இவர்.   இவரது திறமையை நன்கு உணர்ந்த காரணத்தினால் தலைவர் கலைஞர்  அன்றைக்கு காவல் ஆணையம் ஒன்று அமைத்தபோது அந்தக் காவல் ஆணையத் தலைவராக சபாநாயகம் நியமித்தார். அதன் மூலமாக தமிழ்நாடு காவல்துறை பல பயன்கள் அடைந்திருக்கிறது. இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு, சபாநாயகம் போன்றவர்கள் ஒரு பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களை வாழ்த்துவதே எங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பாக்கியம் ஆகும்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு