சென்னை: சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் வலுத்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2,000, 3,000 ஆண்டு கால பழமையை பேசுவதால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்.ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். …