சந்து கடையில் மது விற்ற 5பேர் கைது

ஓமலூர், ஜூன் 27: ஓமலூர் காவல் நிலைய பகுதிகளில், சட்டவிரோதமாக சந்துகடை மூலம் கலப்பட மது பானம் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஓமலூர் போலீஸ் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் உத்தரவின் பேரில், ஓமலூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசாரும், டி.எஸ்.பி குற்றபிரிவு போலீசாரும், நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். கூலி வேலை செய்பவர்களை போல போலீசார் சென்று, மது வாங்குவதை போல நடித்து, சந்து கடையில் மது விற்பனை செய்த புளியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன், கருத்தானுர் ஈஸ்வரன், காமலாபுரம் மாதையன், ஓமலூர் தங்கராஜ், சுந்தரவடிவேல் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள், ₹6ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை