பாலக்காடு, ஜூன் 7: கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பை அடுத்த கோக்கடவைச் சேர்ந்தவர் ராஜூ (66). இவர் மாஹியிருந்து மதுப்பாட்டில்கள் வாங்கி வந்து அதிகவிலைக்கு மதுப்பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன்பேரில் தளிப்பரம்பு கலால் துறை சஜீவ் தலைமையில் காவலர்கள் மப்டியில் சோதனை செய்து ராஜூயை மடிக்கி பிடத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்த 13 லிட்டர் மதுப்பாட்டிகளை பறிமுதல் செய்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.