தென்காசி, செப்.2: தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் சங்கரன்கோவில் வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.