கோஷ்டி மோதலில் 2பேருக்கு கத்திக்குத்து

சேலம், மே 4: சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (19). பெருமாள் கோயில் கரடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (24). இவர்கள் இருவரும் சிவதாபுரம் செங்கரடு கோயில் அருகே தெருக்கூத்து பார்க்க சென்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றியதில் இருவரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து மோதிக்கொண்டுள்ளனர். மேலும், கத்தியைக் கொண்டு ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் மற்றும் சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார் சிறுவன் உள்பட இருவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை