கோவை ரயில் நிலையத்தில் தசரா பண்டிகையையொட்டி கூட்டம் அலைமோதியது

 

கோவை, அக்.5: தசரா பண்டிகை பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட மாநிலத்தவர்கள் தசரா பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் நேற்று குவிந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் நேற்று இரவு கூட்டம் அதிகம் காணப்பட்டது.  மேலும் ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்பினர். அதனைத் தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் ஏறிச் சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை