கோவையில் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி திடீர் பலி

கோவை: கோவையில் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி திடீரென இறந்தார். கோவை வேலாண்டிபாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இந்து பிரியா(12) அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இந்து பிரியாவுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. வயிற்றுவலியால் துடித்த அவரை பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இந்துபிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சம்பவத்தன்று கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாகவும், அது செரிமானம் ஆகாமல் உணவு விஷமாகி அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.  …

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை