கோவை : கோவை, செட்டி வீதியில் தனக்குதானே வீட்டில் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புண்ணியவதி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதாக தெரிகிறது. அப்போது பிறந்த ஆண் குழந்தையின் தொப்புள் கொடியை சரியாக அறுக்காமல் விட்டதாக தெரிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறந்த சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்த நிலையில், தாய் புண்ணியவதி மீது வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …