களக்காடு, பிப்.29: களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவர் லதா தலைமை வகித்தார். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிதம்பரநாதன் வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமா பரிசுகள் வழங்கினார். இதில் திருவள்ளுவர் படிப்பக நிறுவனர் நம்பிராஜன், வட்டார வள மைய ஊழியர் காதர், மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் மரியரெத்னராஜ் நன்றி கூறினார்.