சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உன்னதமான ஆன்மாக்கள், கோயில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. கோயில் நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வரலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. …