கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ள  தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் கடந்த 16ம் தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே வழிப்பறி வழக்கில் தொடர்புடைய திருத்தணி அடுத்த செருக்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா(22) என்பது தெரிந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி சந்துருவை(23) கைது செய்து கொள்ளையடித்த பணத்தில் மீதி வைத்திருந்த 2000 ரூபாயை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்