கோயிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்: பெண் மீது வழக்குப்பதிவு

போபால்: மத்திய பிரதேசம் உஜ்ஜைனி மாவட்டத்தில் மகாகளிஸ்வர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்த கோயிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற மனீஷா என்ற பெண் கோயிலில் பாலிவுட் சினிமா பாடலுக்கு நடமாடியுள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கினர். இதை பார்த்த, பலர் கோயிலுக்குள் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மனீஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் உத்தரவின் பேரில், ‘விதிமுறை மீறி கோயிலுக்குள் டான்ஸ் ஆடியதாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்’….

Related posts

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!

பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் : ராகுல் காந்தி எச்சரிக்கை

ஆசியாவின் 3வது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு