கோயிலில் திருட முயன்ற கர்நாடக வாலிபர் கைது

ஓசூர், ஜூன் 24: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராமநாயக்கன் ஏரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது முனீஸ்வரர், ஜலகண்டேஸ்வரர், ஆதிபராசக்தி, சனீஸ்வரர், நாக தேவதைகள் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை குருக்கள் மணிவாசகம் வழக்கம்போல் பூஜை செய்ய வந்தார். அப்போது கோயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து கோயில் கதவை பூட்டிவிட்டு, இதுகுறித்து ஓசூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கர்நாடக மாநிலம் கனகபுர தாலுகா முத்துவாடி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பதும், கோயிலில் திருட வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைதான அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி நீக்கம் செய்யப்பட்டவர் என தெரிய வந்தது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை