கோயம்பேடு மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகளால் நிரம்பி உள்ளது.  இதனால் முறையாக வியாபாரம் செய்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அப்படிப்பட்ட கடைகளின் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து வியாபாரிகளின் சங்கங்கள் இணைந்து முதன்மை நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து, நேற்று முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தி தலைமையில் கொண்ட அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறியப்பட்டு. பின்னர் அந்த கடைகளுக்கு சுமார் ரூ.45,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தி கூறுகையில், `கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் நிரம்பி உள்ளதாகவும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று நேற்று சுமார் 70க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளோம். மீதியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவதற்கான பணிகள் தொடரும். மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் போட்டு வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை