கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய நண்டு

வேதாரண்யம்: கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வரும் ராமநாதபுரம் மீனவர்கள் வலையில் ஆரஞ்சு கலரில் அதிசய நண்டு சிக்கியது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். சீசன் முடியும் காலத்தில் ராமநாதபுரம் மீனவர்கள் வல்லத்தில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில் ராமநாதபுரம் மீனவர்களின் வல்லத்தில் அதிசய நண்டு சிக்கியது.பொதுவாக கோடியக்கரை கடற்கரையில் கல் நண்டு, பச்சை நண்டு, நீலக்கால் நண்டு, மூன்று புள்ளி சிலுவை நண்டு உள்ளிட்ட பல்வேறு வகை நண்டுகள் கிடைக்கின்றன. ராமநாதபுரம் மீனவர்கள் வல்லத்தில் ஆரஞ்சு கலரில் அதிசய நண்டு சிக்கியது. இந்த நண்டு 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை உள்ளது. பெயர் என்ன என்று தெரியவில்லை என்று கூறினர். கோடியக்கரை கடற்கரையில் ஆரஞ்சு நிறத்தில் இந்த சிக்கிய நண்டை ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் பார்த்து சென்றனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை