கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் மகாகாளியம்மன் கோயில் ஆடி திருவிழா

கொள்ளிடம்,ஜூலை 30: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் மகாகாளியம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள சாவடி குளத்தில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், முக்கிய தெருக்களில் காளியாட்டத்துடன் அம்மன் வீதியுலாக் காட்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கஞ்சி வார்த்தல் மற்றும் அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆசிரியர் சங்கர், கோயில் அர்ச்சகர் பழனியப்பன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை