சென்னை:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட பதிவு: சென்னை ஸ்டான்லி
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும்
அவலங்கள் குறித்து டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா
பேரிடரின் துயரத்தை விட அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள்
அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர்,
சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும்
அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை
அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். …