சென்னை: கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகைப் பொருட்களை தமிழக அரசு வழங்கவுள்ளது. 2.11 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 13 மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. கோதுமை, ரவை, உப்பு, பருப்பு உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. …