கொரோனா கட்டுப்பாடுகளுடன் அம்பேத்கர், பாபுஜி பிறந்த நாள் கொண்டாட அனுமதி

கோலார்: கொரோனா கட்டுப்பாடுகளுடன் அம்பேத்கர் மற்றும் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரின் பிறந்த நாளை கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து சமூகநலம் மற்றும் கல்வி துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆர்.செல்வமணி ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் பேசும்போது, “ சமூகத்திற்கு சேவை செய்த மகான்களின் பிறந்த நாளை கொண்டாடுவதும், அவர்களின் சாதனைகளை வருங்கால சந்ததினருக்கு எடுத்து கூற வேண்டியது அனைவரின் கடமையாகும். அதே சமயத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இரு மகான்களின் பிறந்த நாள் விழாவை பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவதன் மூலம் கொண்டாட வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு இறுதி தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களை அழைத்து கவுரவிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து வட்டத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரில் பவன்கள் அமைக்க வேண்டும். கிராமம், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்கள், நகர உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பிறந்த நாள் விழா கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டார்….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி