கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ரூ.80 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானல், செப். 6: கொடைக்கானல் நகராட்சி பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் ஏரி அருகே உள்ள சாலை, நாய்ஸ் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் சுமார் ரூ.80 லட்சம் செலவில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியினை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் செல்லத்துரை, உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் விரைவாகவும், தரமாகவும் பணிகளை செய்ய அறிவுறுத்தினர். அதே போல் கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள ஜெமினி கணேசன், பங்களா சாலை அமைக்கும் பணியினை நேற்று நகர் மன்ற தலைவரும், துணைத் தலைவரும் ஆய்வு செய்தனர்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை