கொங்கணாபுரத்தில் 350 மூட்டை பருத்தி ₹6.50 லட்சத்திற்கு ஏலம்

இடைப்பாடி, ஜூன் 2: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் 350 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் கொட்டு ரக பருத்தி குவிண்டால் ₹3499 முதல் ₹4700 வரை ஏலம் போனது. 30 மூட்டை எள் ₹2.50 லட்சத்திற்கு ஏலம் போனது. வெள்ளை எள் கிலோ ₹120.50 பைசா முதல் ₹130.90 பைசா வரையிலும், சிகப்பு எள் ₹90.90 பைசா முதல் ₹120 வரையிலும் ஏலம் போனது. இதில் 350 மூட்டை பருத்தி ₹6.50 லட்சத்திற்கும், 30 மூட்டை எள் ₹2.50 லட்சத்திற்கும் என மொத்தம் ₹9 லட்சத்திற்கு ஏலம் போனது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்