பூந்தமல்லி: போரூரில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட மொட்டை ராஜி (19) என்பவரை, போரூர் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் விசாரணைக்காக நேற்று காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது ராஜி திடீரென போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி தப்பி ஓடினான். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தப்பினான். இதையடுத்து தப்பி ஓடிய ராஜியை தேடும் பணியில் போரூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….