கைதான பிரபல ரவுடி ‘சிடி’ மணி கால் முறிந்தது: ஸ்டான்லியில் அனுமதி

சென்னை,: தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) சிடி மணி. பிரபல ரவுடியான இவர், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். சேலத்தில் பதுங்கி இருந்த இவரை, கடந்த சில நாட்களுக்கு முன், தனிப்படை போலீசார் கைது செய்து, வழக்கு சம்பந்தமாக நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம், நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, தப்பியோட முயன்ற சிடி மணிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிடி மணி அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கைதிகள் தங்கி சிகிச்சை பெறும் பிரிவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!