கெட்ட நேரத்தில் பிறந்ததால் பிரச்னையென கருதி 6 மாத குழந்தையை கொன்ற தாய் கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ராசாபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). டெய்லர். மனைவி லதா (26). 4 வயதில் மகன், 6 மாதத்தில் கோகுல் என்ற குழந்தை உள்ளனர். கடந்த மார்ச் 21ம் தேதி மகேஸ்வரன் வேலைக்கு சென்று விட்ட நிலையில், லதா, குழந்தை கோகுலை தொட்டிலில் போட்டு அருகில் சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த லதா கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து குழந்தையை தேடி பார்த்தனர். அப்போது ராசாபுரம் செல்லும் வழியில் உள்ள பாலாற்றங்கரை புதரில் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்தான்.இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் விசாரணையில் தாய் லதாவே பெற்ற மகனை புதரில் வீசி கொன்றது தெரிந்தது. குழந்தை பிறந்த பின் லதாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. கெட்ட நேரத்தில் பிறந்ததால் நேரம் சரியில்லை என நினைத்து குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லதாவை கைது செய்தனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது