கூவத்தில் வாலிபர் சடலம்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள கூவம் கால்வாயில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று,  வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சட்டை பையில் ஒரு  துண்டு சீட்டு இருந்தது. அதில் ஜெயக்குமார் என்று எழுதப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யாரேனும் கொலை  செய்து கூவம் கால்வாயில்  வீசினார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா  என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை