கூலித்தொழிலாளி மாயம்

சேலம், நவ. 15:சேலம் அதிகாரிப்பட்டி உடையாப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(எ) சந்திரன்(41). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 19ம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அம்மாப் பேட்டை போலீசில் தந்தை பெரியசாமி புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல்போன சந்திரசேகரனை தேடி வருகின்றனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு