மதுரை: கூட்டுறவு சங்க மோசடி மீது நடவடிக்கை எடுக்காவிடில் நலிவுற்ற கூட்டுறவு சங்கங்களை மூடும் நிலை ஏற்படும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான தேனூரில் உள்ள 2 இடங்களை அரசின் விலை நிர்ணயக்குழு அனுமதியின்றி சண்முகசுந்தரம் என்பவருக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும், கூட்டுறவு சங்க நில விற்பனையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திருச்சி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் துணை பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து தனக்கு இடம் விற்கப்பட்டதை உறுதிப்படுத்தக் கோரி சண்முகசுந்தரம் மனுத்தாக்கல் செய்துள்ளார்….