கூட்டுறவு சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காரிமங்கலம், ஜூன் 2: காரிமங்கலம் ஒன்றியம், பேகாரஅள்ளி கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றிய ரவி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பணி நிறைவு பாராட்டு விழா கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. அவருக்கு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் செயல் ஆட்சியர் சந்தியா, துணை செயலாளர் முருகேசன், முன்னாள் சங்கத் தலைவர் பொண்ணுவேல், பிடிஏ தலைவர் ஜீவாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் மாது, முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், தனபால், சந்திரன், வையாபுரி, பட்டு, சிரஞ்சீவி, குணசுந்தரி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை