கூட்டுக்குடிநீர் திட்ட தூய்மை பணி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார்

 

பரமக்குடி,செப்.11: பரமக்குடியில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட தூய்மை பணியினை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். பரமக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட தூய்மை பணி நடைபெற்றது. இந்த பணியினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா, நகர்மன்ற உறுப்பினர் பாக்கியம், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மகாலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர்கள் வடிவேல், முத்துகிருஷ்ணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை