கூடலூர், ஜூலை 24: கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரியகுளம் அரசு மருத்தவமனை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ஜுனியர் ரெட்கிராஸ், யூத் ரெட்கிராஸ் இணைஒந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜுதீன் வரவேற்று, குருதிக்கொடையாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பெரியகுளம் மருத்துவர் பாரதி தலைமையில் இரத்த சேகரிப்பு குழுவினர் கொடையாளிகளிடம் இரத்தம் சேகரித்தனர். நிகழ்ச்சியில் மருத்துவப்பணியாளர்கள், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கௌரவச் செயலாளர் சுருளிவேல், கம்பம் பள்ளத்தாக்கு கிளை தலைவர் டாக்டர் பூர்ணிமா, செயலாளர் பாண்டி, குருதி தியாகராஜன், அன்பு, ராஜா, யோகா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.