கூடலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஊட்டி, ஆக.24: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நீலகிரி மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நாளை 25ம் தேதி கூடலூர் மைசூர் சாலையில் பழைய இந்தியன் வங்கி பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் பங்கேற்று குறைகளை கேட்க உள்ளார். எனவே, அன்றைய தினம் கீழ் கூடலூர், கூடலூர் நகரம், கூடலூர் நகரம் தெற்கு, தேவர்சோலை, மசினகுடி, பந்தலூர், சேரம்பாடி, அய்யன்கொல்லி மற்றும் உப்பட்டி பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி