குளோபல் உலக சாதனைக்காக 50 நிமிடங்களில் 50 ஆசனங்கள்: அசத்திய பள்ளி மாணவன்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அரிமா பள்ளியில் நான்காம் வகுப்பு படிப்பவர் நவீன்குமார். இவர் பந்து ஒன்றை வைத்துக்கொண்டு ஐம்பது நிமிடத்தில் 50 ஆசனங்களை செய்யும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வைத்தார். பள்ளி முதல்வர் முருகன், துணை முதல்வர்  திவ்யநாதன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா மற்றும் மும்பை குளோபல் உலக சாதனை நிறுவனம் நடுவர்களும், ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குளோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் மாணவர் நவீன்குமார் 6 அடி உயரத்தில் 50 பல்வேறு வகையான ஆசனங்களை 50 நிமிடத்தில் தன் உடலில் பந்தை பல்வேறு இடங்களில் வைத்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை அரிமா மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். யோகா பயிற்சியாளர் சையது ஜீனைத் முனீர் நன்றி கூறினார்….

Related posts

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தொடர்ந்து 4வது முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்: புதிய நியமனம் வரை கவர்னராக நீடிப்பாரா?

தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்