குளத்தூரில்தாய் இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு சாவு

குளத்தூர், ஏப்.11: குளத்தூர் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் பிச்சைமணி(46). திருமணமாகவில்லை. தனது தாயார் ஆதிலட்சுமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆதிலட்சுமி இறந்துவிட்டார். இதனால் பிச்சைமணி சோகமாக காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் தூக்கிலிட்டு பிச்சைமணி இறந்தநிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் பார்த்து குளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிச்சைமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை