குலதெய்வ கோயிலுக்கு சென்ற மதுரையை சேர்ந்தவர் பலி

நெல்லை, ஜூன் 18: கங்கைகொண்டான் அருகே, குலதெய்வ வழிபாடு நடத்தச் சென்றவர் சிற்றாற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே சிற்றாற்று பகுதியில் நேற்று காலை ஆண் உடல் கிடப்பதாக அங்குள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 32 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் உடலை மீட்டனர். கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பதும், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்ததும் தெரிய வந்தது. பாலாஜிக்கு மூச்சிரைப்பு மற்றும் வலிப்பு நோய் இருந்தாகவும், இதனால் அவர் தவறி சிற்றாற்றில் விழுந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பாலாஜியின் உடலை போலீசார் அனுப்பி வைத்ததுடன், மதுரையில் உள்ள அவரது உறவினர்களிடம் செல்போன் மூலம் நடந்தது குறித்து தகவல் கூறினர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்