தென்காசி, ஜூலை 6: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கு உகந்த அம்சமாக திகழும் படகு சவாரி இன்று துவங்குகிறது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் 70 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவி குளியலுக்கு அடுத்தபடியாக படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக தென்காசி, குற்றாலம் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலா துறையின் தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது. தற்போது படகு குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து படகுகள் தயார் செய்யப்பட்டு இன்று காலை முதல் படகு சவாரி துவங்குகிறது. கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
குற்றாலத்தில் இன்று படகு சவாரி துவக்கம்
previous post