சென்னை: குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகங்களில் தீவிர குற்றங்கள் புரியும் A+, A, B, C, என பிரிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி ஆணையர்கள் குழுவில் 54 பேர் கொண்ட தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு நாளை முதல் செயல்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். …