குறைதீர்க்கும் நாள் முகாம் 149 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

திருவாரூர், ஏப். 11: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் தீர்க்கும்நாள் முகாமில் பொது மக்கள் பல்ேவறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மொத்தம் 149 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 149 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2 திருநங்கைகளுக்கு ஆடுகள் வளர்ப்பதற்காக தலா ரூ.24 ஆயிரம் வீதம் காசோலைகளை கலெக்டர் சாரு வழங்கினார். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் லதா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி