குறுவட்ட விளையாட்டு போட்டி

திருத்துறைப்பூண்டி, ஆக. 30: திருத்துறைப்பூண்டி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் கேரம் விளையாட்டு போட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தென்பறையில் நடைபெற்றது திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சஞ்சய் தரன் மற்றும் பிரதாப் ஆகியோர் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 2ம் இடம் பிடித்தனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலலிதா, உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், ஆசிரியர்கள் பாஸ்கரன், தமிழ்ச்செல்வி நடராஜன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி