குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி: ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் ஒருமுறை பதிவேற்ற (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மே 21 ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வு நடைபெற உள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்