கும்பகோணம், தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயிலில் 2 ஆயிரம் டன் நெல், 1250 டன் அரிசி திருவள்ளூர், கோயம்புத்தூருக்கு அனுப்பி வைப்பு

 

தஞ்சாவூர், ஆக. 25: கும்பகோணம், தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல், 1250 டன் அரிசி திருவள்ளூர், கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல், 1250 டன் அரிசி கும்பகோணம், தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் கும்பகோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு 2000 டன் நெல் 42 வேகன்களிலும், 21 வேகன்களில் அரவைக்காக, 1250 டன் அரிசி பொது விநியோக திட்டத்திற்காக தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’