சென்னை: குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீனை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான தேசிய தடகள போட்டியில் அனுமதிக்க கோரி சமீஹா வழக்கு தொடர்ந்திருந்தார். தகுதி பட்டியலில் 8-வது இடம் பிடித்திருந்ததால் அவரது பெயர் இடம்பெறவில்லை என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்தது. 8-வது இடம் பிடித்திருந்தாலும் பெண்கள் வரிசையில் அவர் தான் முதல் இடத்தில் உள்ளார் என நீதிபதி தெரிவித்தார். …